கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா?

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடப்பு ஆண்டு திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. வரும் 29 ஆம் தேதி தொடங்கி மே 24 ஆம் தேதி வரை மொத்தம் 9 மாநிலங்களில் 60 ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன.
கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஐபிஎல் போட்டிகளைக்காண மைதானங்களில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால், மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில் ஐபிஎல்-இன் ஆட்சி மன்றக்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி கூடுகிறது. முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனத்தெரிகிறது.



