காஞ்சிபுரம்
கொரோனா அச்சத்தை பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் எம் எல் ஏ பழனி

கொரோனா அச்சத்தை பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் எம் எல் ஏ பழனி
ஸ்ரீபெரும்புதூர்- கோடம்பாக்கம் சாலை குன்றத்தூர் அருகே செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் வெளியேறும் வழி மதகு திறக்கப்படும் போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட கிராமம் முடக்கப்படும் நிலை ஏற்பட்டது
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நீண்டகால வேண்டுகோள் படி,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வரின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி பாலத்தை கட்ட ஆனை பெற்று தந்தார். அதன்படி பாலம் கட்டப்பட்டு வரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, இதனை இன்று அதிகாரிகளுடன் எம்எல்ஏ பழனி ஆய்வு செய்து துரிதமாக முடித்து கொடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

