சென்னை
பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் திமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன .

பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் திமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன .
பூவிருந்தவல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெய்குமார் தலைமையில் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் அரிசி,பருப்பு, எண்ணை,காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் செம்பரம்பாக்கம்,காட்டுப்பாக்கம், ஆயில்சேரி,சோராஞ்சேரி போன்ற ஊராட்சிகளில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் மற்றும் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு என 5 ஆயிரம் பேருக்கு மளிகை பொருள் தொகுப்பு மற்றும் முக கவசத்தை வழங்கினர்.




