10 வயது சிறுவன் மேளம் இசையுடன் நூதன திருமணம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தனியார் திருமண மஹாலில் தென்னிந்தியா பத்திரிக்கையாளர்கள் யூனியன் மாநில மின்னஞ்சல் ஊடக செயலாளர் சந்தோஷ்குமார் , ஜான்சி தம்பதியர் திருமண விழா நடைபெற்றது .விழாவில் சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் தலைவர் சந்திரிகா செயல் தலைவர் மருது அழகுராஜ் பொதுச் செயலாளர் மாரியப்பன் பொருளாளர் மீனாட்சிசுந்தரம் மாநில முதன்மை செயலாளர் வஜ்ரவேல் ஆவடி ராஜா இணை செயலாளர் ராம்குமார், சென்னை மாவட்ட செயலாளர் உதயா, பொதுக்குழு உறுப்பினர் ராஜ சேகர் இசக்கி ராஜ் சரவணன், லில்லி , பவானி ஷோபா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி புகைப்படம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நிகழ்ச்சியில் 10 வயது சிறுவனின் மேளதாளத்துடன் திருமணம் நடைபெற்றது. சிறுவனின் இசையொலியை அனைவரும் வியப்புடன் கண்டு ரசித்தனர். இதில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் யூனியன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்


