சென்னை
19 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

பூந்தமல்லியில் அதிமுக சார்பில் ரவிசந்திரன் அவர்கள் பொதுமக்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி மற்றும் 19 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
பூவிருந்தவல்லி நகராட்சியின் 7வது வார்டு பகுதியில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் 19 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாவித் அகமத் உட்பட அதிமுக நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.




