திருவள்ளூர்
சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தடை

சென்னை புழல் மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் நோய்க்கிருமிகள் பரவலைத் தடுக்கும் வகையில் சிறைச்சாலைக்குள் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் இந்தநிலையில் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர்களுக்கு சிறை நிர்வாகம் தடைவிதித்துள்ளது மேலும் இதே போன்று திருச்சி. கோவை. மதுரை. கடலூர் உள்ளிட்ட அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகளை சந்திக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


