வெறிச்சோடிய இந்தியச் சாலைகள்

இது, நாடு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான திறன்களை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான சோதனை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். “இந்த ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக நாம் அனைவரும் சுய தனிமைப்படுத்தலை ஏற்போம், இந்த முயற்சி COVID-19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தை நமக்கு அளிக்கும்”
New Delhi:
பொருளாதாரத்தினை சீர்குலைந்து உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற, மிகவும் கொடிய தொற்றுநோயான COVID-19 இன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இன்று சுய ஊரடங்கினை கடைப்பிடிக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தேசத்திற்கு உரையாற்றியபோது, குடிமக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டார் – இது, நாடு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான திறன்களை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான சோதனை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். “இந்த ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக நாம் அனைவரும் சுய தனிமைப்படுத்தலை ஏற்போம், இந்த முயற்சி COVID-19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தை நமக்கு அளிக்கும்” என்று ஊரடங்கு உத்தரவு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மோடி ட்வீட் செய்துள்ளார். “இப்போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் வரவிருக்கும் காலங்களில் உதவும்” என்றும் அவர் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.



